"செவிலியர்களின் சேவைக்கான விருதுகளும், பாராட்டுக்களும் காத்திருக்கிறது"-அமைச்சர் விஜயபாஸ்கர்

0 2398

செவிலியர்களின் சேவைக்கான விருதுகளும் பாராட்டுக்களும் காத்துக்கொண்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புளோரன்ஸ் நைட்டிங்கேல் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய செவிலியர்கள், மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,மருத்துவமனை முதல்வர் நாராயணபாபு செவிலியர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

செவிலியர்கள் அனைவரும் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் எனக் கூறிய அமைச்சர், செவிலியர்களின் சேவைக்கான விருதும் பாராட்டுக்களும் காத்துக்கொண்டு இருப்பதாக தெரிவித்தார். இறுதியாக செவிலியர்களுடன் அமைச்சர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments